முறையற்ற உறவுக்கு சம்மதிக்காத பெண்ணின் குழந்தைக்கு அமிலவீச்சு..!!
முறையற்ற திருமணத்திற்கு தாய் சம்மத்திக்காததால் அவரின் குழந்தைக்கு அமில தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று இந்தியா – புதுடெல்லியில் பதிவாகியுள்ளது.திருமணமான குறித்த பெண் தொடர்ந்து பல மாதங்களாக மங்கள் என்ற 27 வயதுடைய நபரொருவரால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த குறித்த பெண் இது தொடர்பில் அவரது கணவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பின்னர் அவர்கள் அப்பிரதேசத்தை கைவிட்டு வேறு பிரதேசத்தில் குடியேறியுள்ளனர்.எவ்வாறாயினும் , சில தினங்களில் பின்னர் அவர்களின் இரண்டு வயது குழந்தை காணாமல் போயுள்ளது.
குழந்தையை காணாமல் தேடி வந்த அவர்களுக்கு மறுநாள் பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.குறித்த குழந்தையின் மீது அமில தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குப்பை தொட்டியொன்றில் இருந்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் போது , குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபட்டுள்ளது.குழந்தையின் முகம் அமில தாக்குதலால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அமில தாக்குதல் காரணமாக குழந்தையின் உடலில் 20 வீதமான பகுதி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.குழந்தையின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் , குழந்தையின் ஒரு கண் பார்வையை இழக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் , வௌிவந்த தகவல்களுக்கு அமைய காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , இந்த சம்பவத்துடன் மங்கள் என்ற குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating