வீட்டில் வாலிபர்களுடன் உல்லாசம்: பொலிசார் அதிரடி..!!
தேனி அரப்படிதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 27). இவர் பூதிபுரம் கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த மணி (40) என்பவரிடம் எம்.ஜி.ஆர். நகரில் சில அழகான பெண்கள் இருப்பதாகவும், ரூ.1000 கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
மணி இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரகசியமாக அப்பகுதியில் கண்காணித்த போது காந்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சில பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து அங்கிருந்த சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மகள் சரண்யா (17), தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி சாந்தி (42), பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த குட்டி மனைவி பிரியங்கா (19), பெரியகுளம் கண்ணன் மகள் தனலெட்சுமி (34), கம்பம் சுருளி ரோடு பகுதியைச் சேர்ந்த திவாகரன் மகள் பிரியா (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் புரோக்கராக இருந்த மதன்குமாரும் கைது செய்யப்பட்டார். விபசாரத்தில் ஈடுபட்ட 5 பெண்களையும் கொடுவிலார் பட்டி தனியார் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.
Average Rating