வெற்றிலையின் மருத்துவ சிறப்பு..!!
உணவாக அன்றி சமைக்காமலேயே சாப்பிடத் தகுந்தது வெற்றிலை.இதுவும் கீரை வகையைச் சேர்ந்தது.இது எல்லாப்பகுதியிலும் பயிரிடப்படுகின்றது.இதுவும் கொடியினத்தைச் சேர்ந்தது.இதில் இரண்டு வகை வெள்ளை றெ;றிலை கமார் வெற்றிலை என்பதாகும்.
வெள்ளை வெற்றிலையை விட கமார் வெற்றிலை காரம் மிகுந்தது.மருத்துவ குணமுள்ளது.உடலுக்கு உஸ்ணத்தை அளிக்க வல்லது.நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை இதற்கு உண்டு.இதன் சாறு கிருமிகளை அழிக்க வல்லது.சாப்பிட்ட உணவை சுலபமாக ஜீரணிக்க வைக்கும்.வாய்நாற்றத்தைப் போக்கும்.வயிற்றுவலி வயிற்று உப்பிசம் இருப்பின் நீங்கும்.
தலை பாரத்தைக் கூட போக்க வல்லது.வாத பித்தத் தொடர்பான வியாதிகளையும் கண்டிக்க வல்லது.தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறுவோருக்கு கமார் வெற்றிலைச் சாற்றுடன் அதே அளவு கற்புரம் சேர்த்து குதப்பி நெற்றிப் பொட்டில் பற்றாகப் போட குணமாகும்.வயிற்று உப்புசம் காரணமாக அவதியுறுவோருக்கு கமார் வெற்றிலை இடித்துச் சாறு எடுத்து இரண்டு அல்லது மூன்று ஸ்புன் அளவு உள்ளுக்கு அருந்தக் கொடுத்தால் போதும்.
உப்புசம் தணியும்.குழந்தைகளுக்குக் காய்ச்சலாக இருக்கும் சமயம் வெற்றிலைச் சாற்றுடன் சிறிது வெந்நீர் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வரலாம்.இதனால் காய்ச்சல் தீரும்.வெற்றிலைச் சாற்றை தனியே அதிக அளவு சாப்பிடுவது வெற்றிலைச் சாற்றுடன் சிறிது வெந்நீர் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வரலாம்.இதனால் காய்ச்சல தீரும். வெற்றிலைச் சாற்றை தனியே அதிக அளவு சாப்பிடுவது கெடுதலானது.இத்துடன் பாக்கு சுண்ணாம்பு சேர்த்துச் சாப்பிட கெடுதல் இல்லை.
Average Rating