பிரேசில் சிறையில் கலவரம்: 10 கைதிகள் தலை துண்டிப்பு..!!

Read Time:1 Minute, 22 Second

201701151121426492_Fighting-in-Brazil-prison-leaves-at-least-10-dead_SECVPFபிரேசில் நாட்டின் வட கிழக்கில் நடால் நகரம் உள்ளது. இங்கு அல்காகஷ் என்ற மிகப்பெரிய சிறைச் சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு கலவரம் மூண்டது.

தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், போலீசாரும் விரைந்து சென்று கலவரத்தை அடக்கினார்கள். அதில் 10 கைதிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். கைதிகள் யாரும் தப்பி ஓடவில்லை. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் சிறைக்குள் தொடர்ந்து துப்பாக்கி சண்டையும், வெடி குண்டு சத்தமும் கேட்கிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவலாளியை கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த பரிதாப நிலை..!! (வீடியோ)
Next post பீகாரில் படகு விபத்தில் 24 பேர் பலி..!!