வெளிநாட்டு வாலிபரை காதலித்து மணமுடித்த தமிழ் பெண்..!! (வீடியோ)
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன்- மைதிலி தம்பதியினருக்கு மகிமா என்ற மகளும், ராதேஷ் என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்தினருடன் 1996ம் ஆண்டே அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்கு குடியேறினர்.
மகிமா அங்குள்ள பல்கலைகழகத்தில் படித்துமுடித்துவிட்டு ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரைன் என்பவருக்கும், மகிமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே அவுஸ்திரேலியாவில் மிக எளிமையாக 2015ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை தொடர்ந்து மகிமா- பிரைன் திருமணத்தை இந்தியாவில் இந்துமத முறைப்படி நடத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி நேற்று ஈரோடு சோலார் கார்னீஷ் பார்க் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து பிராமிண் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இது தங்களுடைய தாத்தா- பாட்டியின் விருப்பம் எனவும், அவர்களது ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மகிமா தெரிவித்துள்ளார்.
Average Rating