கல்வி கற்கும் பாடசாலைக்கு செய்யக்கூடாததை செய்த மாணவர்!…CCTVயால் சிக்கினார்..!!
Read Time:1 Minute, 15 Second
குவைட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் அந்நாட்டு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர் கல்வி கற்கும் பாடசாலைக்கு தீ வைத்த குற்றச்சாட்டின் பேரில் , கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைட்டின் , பயான் பிரதேசத்தில் அமைந்துள்ள ஃபர்ஹான் ஹல் கலீட் என்ற பாடசாலைக்கு குறித்த மாணவர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஏற்பட்ட தீப்பரவலில் பாடசாலையின் அதிபர் அலுவலகம் மற்றும் செயலாளர் அலுவலகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவர் தீ வைப்பதற்காக முகமூடி அணிந்து கொண்டு பாடசாலைக்குள் நுழைவது பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.இதனை தொடர்ந்தே குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating