ஒரு பூனையால் ஒரு தெருவுக்கே நடந்த சோகம்: ஆனால் ஹீரோ தான் போங்கள்..!!
பிரித்தானியர்கள் மிருகங்களை மனித உயிருக்கு சமமாகவே மதித்து வருகிறார்கள். அன் நாட்டில் உள்ள நகரம் ஒன்றில், 30 அடி உயரமான மின் கம்பத்தில் பூனை ஒன்று ஏறிவிட்டது. ஆனால் அதனால் மீண்டும் கீழே இறங்க முடியவில்லை. சுமார் 20 மணித்தியாலங்களாக அது கடும் குளிருக்கு மத்தியில் கம்பத்தின் உச்சியில் நின்றுள்ளது.
இதனை கவனித்த அயல்விட்டு காரர் ஒருவர் உடனே , தீ அனைக்கும் படையினருக்கும். மிருகங்களை மீட்க்கும் ஆ.எஸ்.பி.சி.ஏவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதிக வலு உள்ள மின்சாரம் செல்லும் அந்த கம்பத்தில் ஏறி பூனையை காப்பாற்றுவது என்பது மிகவும் கடுமையான காரியம். என் நேரத்திலும் மின்சாரம் தாக்கலாம். இதனால் குறித்த தெருவுக்கு செல்லும் அனைத்து மின்சாரத்தையும் மின்சார நிறுவனம் நிறுத்தியது.
இதனால் குறித்த தெருவில் வசித்த அனைவரும் சில சிரமங்களுக்கு உள்ளாகினார்கள். இருப்பினும் பூனையை மீட்டது மிகவும் சந்தோஷமான காரியம் என அனைவரும் பாராட்டியுள்ளார்கள். 30 அடி கம்பத்தில் ஏறி பூனையை மீட்ட , தீ அனைக்கும் வீரருக்கு பலரும் தமது பாராட்டை தெரிவித்துள்ளார்கள்
Average Rating