தமிழனுக்கு தண்ணீர் தர முடியாது! மெரினாவில் கடை வைத்திருக்கும் பெண் அடாவடி..!! வீடியோ
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் பலவகைகளில் போராட்டகாரர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மெரினா அருகில் கடை ஒன்றை வயதான பெண் நடத்தி வருகிறார். அந்த கடைக்கு நேற்று சென்ற இளைஞர் தண்ணீர் பாக்கெட்டுகளை விலைக்கு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் தண்ணீர் பாக்கெட்டுகள் இல்லை என கூறியுள்ளார். ஆனால் அந்த கடையில் அதிகளவு தண்ணீர் பாக்கெட் இருந்துள்ளதை அந்த இளைஞர் பார்த்து ஏன் பொய் சொல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
மேலும் நான் பணம் தருகிறேன் மற்றும் தமிழர்களுக்காக தமிழர்கள் போராடும் போது ஏன் தண்ணீர் தர மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த பெண்மனியோ தமிழன், ஆங்கிலேயர், மலையாளி என்றெல்லாம் கிடையாது. நீ அதிகம் பேசாதே உனக்கு தண்ணீர் கிடையாது என கூற அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது.
பின்னர் அந்த இளைஞரை அங்கிருந்திருந்தவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.
Average Rating