இஸ்ரேல் வீரரை கடத்தியதால்…
Read Time:57 Second
இஸ்ரேல் வீரரை கடத்தியதால் போர் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை: தீவிரவாத தலைவன் பேட்டி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்தி சென்றதால் இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் பெய்ரூட் நகரத்தையே குண்டு வீசி அழித்தது. நூற்றுக்கணக்காணோர் கொல்லப்பட்டனர்.இது பற்றி ஹிஸ்புல்லா இயக்க தலைவர் நசருல்லா இப்போது பேட்டி அளித்துள்ளார். “2 ராணுவ வீரர்களை கடத்தியதால் இஸ்ரேல் போரில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றால் கடத்தி இருக்க மாட்டேன்” என்று கூறினார்.