இளம் கர்ப்பிணி பெண் கொடூரமானமுறையில் படுகொலை..! ஊர்காவற்துறையில் பதற்றம்…! (வீடியோ)
ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் நேற்று மதியம் படுகொலை செய்யப்பட்ட இளம் கர்ப்பிணி தாய், அவருடைய வீட்டு அறைக்குள் வைத்து வீட்டில் இருந்த கத்தியால் குத்தப்பட்டுள்ளதுடன், அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியன களவாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் மதியம் ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் விசமிகளால் குரூரமாக அடித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்.மண்டைதீவு பகுதியில் வைத்து பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றில் இரத்த கறை காணப்பட்டுள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண் அவருடைய வீட்டு அறைக்குள் வைத்து அவருடைய வீட்டில் இருந்த கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவருடைய வீட்டு அறைக்குள் காணப்பட்ட இரத்த கறையை கொலையாளிகள் தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளனர்.
இந்நிலையில் வாய்பேச முடியாத மாற்றுவலுவுள்ள இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி பின்னர் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அந்த ஊரை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அவர்கள் வெளியிடத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த கொலை சம்பவத்தின் போது பெண்ணின் கணவன் வேலை நிமித்தம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நின்றதாகவும், பெண் வீட்டில் தனியே இருந்த நிலையில் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் அயல் வீட்டுக்கு சென்று அங்குள்ளவருடன் பேசிவிட்டு சமைக்க வேண்டும் என கூறிவிட்டே வீட்டுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating