13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி படுக்கைக்கு அழைத்த 38 வயது நபர்: அதிரடி நடவடிக்கை எடுத்த தாயார்..!!
சுவிட்சர்லாந்தில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி படுக்கை அறைக்கு அழைத்த சம்பவம் தாயாரின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள பாடசாலை ஒன்றில் சாரதியாக பணியாற்றி வந்துள்ளார் பிரான்ஸ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட 38 வயது நபர் ஒருவர்.
இவர் குறித்த பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் 13 வயது சிறுமியிடம் அதிக அக்கறையுடன் பேசிப் பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறுமி அந்த சாரதிக்கு ஒரு பெட்டி சொகலெட்டுகளை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
பதிலாக சாரதியும் இனிப்பு வகைகளை சிறுமிக்கு அளித்ததுடன், இவரது சமூகவலைதள சேட் எண்ணையும் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் தொடர்ந்து குறுஞ்செய்திகளை பரிமாறி வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமி குறித்த நபரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட அந்த நபர் வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
மட்டுமின்றி சிறுமியிடம் அவர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும், சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் கேட்டும் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
இதனிடையே சிறுமியிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கவனித்த அவரது தாயார் சிறுமியை கைய்யும் களவுமாக பிடி கூடியதில், சிறுமி நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த சாரதி மீது வழக்கு தொடர்ந்த தாயார், அவருக்கு 120 நாள் சிறை தண்டனை மற்றும் 3 மாத காலம் நன்னடத்தை சோதனை என்பதையும் பெற்று தந்துள்ளார்.
ஆனால் இந்த களேபரங்களில் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி குறித்த பாடசாலை பேருந்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சி்றுமி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating