குரங்கை அறைந்த இளைஞர்… இதுதான் மிருகவதை..!!! (வீடியோ)

Read Time:5 Minute, 17 Second

monkies_10198மிருக வதை என்றால் என்ன? திட்டமிட்டு மிருகங்களைத் துன்புறுத்துவதுதான் மிருகவதை என்றே பொதுவாக பார்க்கப்படுகிறது. காளைகள் திட்டமிட்டு துன்புறுத்தப்படுபவை இல்லை. பிள்ளைகள் போல நடத்தப்படும் விலங்கினங்கள் அவை. ஆனால், தினமும் எங்கோ ஒரு மூலையில் விலங்கினங்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. மிருகவதைக்குத் தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த இரு சம்பவங்களை உதாரணம் சொல்ல முடியும்.

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் வீட்டு மாடியில் இருந்து நாய் ஒன்றை கீழே வீசி துன்புறுத்தினர். அந்த வீடியோ வைரலாகி கடும் அதிர்வை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இருந்து கண்டனம் எழுந்தது. முடிவில் கல்லூரியில் இருந்து அந்த மாணவர்கள் ‛சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். அதேபோல் வேலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் விடுதி பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்றினைப் பிடித்தனர். அதன் கை, கால்களைக் கயிற்றால் கட்டி, அதனை கம்பு ஒன்றில் கட்டி வைத்துத் துன்புறுத்தினர். முடிவில் அந்த குரங்கை எரித்துக் கொலை செய்தனர். இந்த நிகழ்வை நேரில் கண்ட மாணவி ஒருவர், புகார் அளித்ததன் பேரில், அந்த மாணவர்களும் ‛சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இருந்தாலும் ஐந்தறிவு ஜீவன்களை ஆறறிவு ஜீவன்கள் வதைப்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே மனிதர்கள் குரங்குகளைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் கோயில்களில் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. குரங்குகளுக்கு உணவளித்தால் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை சட்டம் சொல்கிறது. ஆனால், அதையும் மீறி குரங்குகளுக்கு மனிதர்கள் தங்கள் சந்தோஷத்திற்காக உணவு அளிக்கின்றனர். வட இந்தியாவில் பெரும்பாலான ஹனுமன் கோயில்களில் குரங்குகள் வளர்கின்றன. ஆங்காங்கே கிடைக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, அந்த பகுதியிலேயே அவைகள் சுற்றித்திரியும். கோயிலுக்கு வருபவர்கள் கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும்.

குரங்குக்கு நடந்த மிருக வதை

அப்படி உணவு வாங்கி சாப்பிட்ட குரங்கு ஒன்றுக்கு நேற்று அதிர்ச்சி அடைந்தது. ராஜஸ்தானில் ஜோத்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள பாலம் ஒன்றில் நேற்று குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. யாராவது சாப்பிட ஏதாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதுபோலவே ஒரு இளைஞர் கையில் வேர்க்கடலையுடன் வந்தார். குரங்குக்கு கொடுப்பது போல கையை நீட்டினார். குரங்கும் ஆசையுடன் அந்த வேர்க்கடலைகளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த இளைஞர் வெறி பிடித்தது போல், குரங்கின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

அடி வாங்கிய வேகத்தில் குரங்கு பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்தது. குரங்கை அந்த இளைஞர் அடித்த போது, அவரது நண்பர்கள் இரக்கமின்றி பலமாக சிரித்தனர். அதோடு, குரங்கை அடித்ததை வீடியோ எடுத்து அதை ஒரு சாதனையாக இணையத்திலும் வெளியிட்டுள்ளனர். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. அதேவேளையில், இது போன்ற வீடியோக்களை ‛funny india’ என்ற பெயரில் வெளியிடும் விஷயத்தில் யு – டியூப் நிறுவனம் யோசித்துச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோன் மாதிரி ‘நடிக்கணும்’ – ஆசைப்பட்ட அலியா பட்..!!
Next post இந்தியாவில் பெண்ணுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: – அதிர வைக்கும் சம்பவம்..!! (வீடியோ)