முச்சக்கர வண்டி சாரதியால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 1 Second

16229662_823514861133218_2136307510_oமுச்சக்கர வண்டி சாரதியொருவர், தன்னுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பெண்ணை வீதியில் சுமார் 100 மீற்றர்கள் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தின் மிக பரபரப்பான அட்டாபூர் வீதியில் நேற்று காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஷபானா என்ற 25 வயதான பெண், முச்சக்கர வண்டிக்காக அதற்கான தரிப்பிடத்தில் காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த முச்சக்கர வண்டியின் சாரதியொருவருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் பயணிகள் இருக்கைக்கு இடையே இருக்கும் கம்பியை பிடித்தபடி அந்த பெண் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த சாரதி, ஒரு கட்டத்தில் வண்டியை செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண், பயத்துடன் கம்பியை பிடித்தப்படி தொங்கிக் கொண்டிருக்க சுமார் 100 மீற்றர்கள் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு நடுவீதியில் கைவிடப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தைத்தொடர்ந்து குறித்த பெண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய சாரதியை பொலிஸார் தேடிவருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பிலான வீடியே சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் காதலனுக்கு 2 மணி நேரம் தாய் பாலூட்ட வேலையை விட்ட காதலி..!!
Next post இயற்கை பொருட்களை கொண்டு சரும முடிகளை நீக்கும் வழிகள்..!!