யாழ். நல்லூரில் ஒன்றுகூடிய பெற்றோர்கள் ..! வலுவடையும் போராட்டம்..!!

Read Time:1 Minute, 44 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி இன்று காலையில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக நல்லூரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தற்போது குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காணாமல் போன தமது உறவுகளை தேடி தருமாறும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கூறி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டம் இன்று நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தப்படுகின்றது.

தற்போது இரு இடங்களில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் தமக்கான முடிவுகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தி இருந்தனர்.

மேலும் இவ்வாறான சூழல் நீடிக்குமாயின் தமிழ் நாட்டினை போல இலங்கையிலும் தமிழர்களின் உரிமைக்காக பாரியளவில் போராட்டம் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் குடம் மாய­மா­னதால் மாமி­யாரை கொன்ற மரு­ம­­கன்..!!
Next post பச்சிளம் குழந்தையை உயிருடன் அறுத்து தின்ற கொடூர தாய்..!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)