யாழ் கர்ப்பிணி பெண் படுகொலை -இவரை தெரியுமா..!!

Read Time:2 Minute, 46 Second

FAR (2)ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து முஸ்லீம் இளைஞன் ஒருவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை இடம்பெற்ற போது யாழ் ஐந்து சந்திப்பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் புத்தளத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பொலிஸார் குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் ஊர்காவற்றுறை பகுதியில் இடம்பெற்ற மாடுகள் திருட்டு சம்பவம் தொடர்பு பட்டுள்ளதுடன் இரும்பு வியாபாரத்தில் இந்நபர் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு முன்னாள் மாநகர மாநகர சபை முஸ்லீம் உறுப்பினர்கள் தற்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் அடைக்கலம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இது தவிர யாழிற்கு போதைப்பொருட்களை புத்தளத்தில் இருந்து கடத்தி விநியொகம் செய்யும் முகவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் முச்சக்கரவண்டி ஒன்றில் இவரும் வந்து தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் என்ற இடத்தைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் (வயது-30) நாகேந்திரன் துஷியந்தன் வயது -32) ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணமகளின் ஆடைகளை அவிழ்த்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் சீனாவின் வினோத திருமண சடங்கு..!! (வீடியோ)
Next post 4ம் நாளாக தொடரும் வவுனியா உண்ணாவிரத போராட்டம்- இருவர் கவலைகிடம்..!! (வீடியோ)