4ம் நாளாக தொடரும் வவுனியா உண்ணாவிரத போராட்டம்- இருவர் கவலைகிடம்..!! (வீடியோ)
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு பெருகும் ஆதரவு!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
அத்துடன் இன்று (26-01) மன்னார்,கிளிநோச்சி, மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவரும் நிலையில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினரும் உண்ணாவிரதிகளுக்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞர் யுவதிகளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களை பரிசோதித்ததுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
Average Rating