ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன்: 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில்..!!

Read Time:2 Minute, 3 Second

201701272155261248_Bangladesh-man-with-28-marriages-jailed-at-25th-wife-plaint_SECVPFவங்காள தேசத்தின் பர்குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர்தான் அவரது கணவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றது தெரியவந்தது.

தான் அதில் 25-வது மனைவி என்பதை புரிந்து கொண்ட அவர், கணவரின் மனைவிகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். அதில் 17 பேரின் விலாசங்களை கண்டுபிடித்தார். அதன்மூலம் தனது கணவரின் 2-வது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், 3-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளான் என்றும், 7-வது மனைவிக்கு ஒரு மகனும், 24-வது மனைவிக்கு ஒரு மகள் உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டாள்.

25-வது முறையாக திருமணம் செய்ததுடன் வரதட்சணை கொடுமையும் செய்துள்ளார் அந்த கல்யாண மன்னன. இதனால் போலீசில் புகார் அளித்துள்ளார் 25-வது மனைவி. ஆனால், போலீசார் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாமல் திணறினார்கள்.

இதனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி குல்னா தலைமை ஜூடிசியல் மாஸ்திரேட்டிடம் புகார் அளித்தார்.

அதன்பேரின் போலீசார் விசாரணை நடத்தி கல்யாண மன்னனை 27-வது மனைவியின் வீட்டில் இருந்து கைது செய்தனர்.

அவனை நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் ஜெயிலில் அடைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தான் இரண்டு திருமணங்கள் மட்டுமே செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவு நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்..!!
Next post அடிக்கடி கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறதா? அதிலிருந்து விடுபட..!!