தொப்புள் பகுதியில் ஆயில் மசாஜ் செய்வதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?
நமது தொப்புள் பகுதியானது நேரடியாக நம் முகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
எனவே இந்த தொப்புள் பகுதியை குறிப்பிட்ட ஆயில்களை கொண்டு மசாஜ் செய்து வந்தால், நம் முகத்தில் உருவாகும் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் பல வகையான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.
தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தொப்புள் பகுதில் தேய்த்து, மசாஜ் செய்து வந்தால், பெண்களின் கருவளர்ச்சி குறித்த பிரச்சனைகள் ஏற்படாது.
நமது தொப்புள் பகுதியில் வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நம்முடைய முகத்தில் பருக்கள் வராமல் கட்டுப்படுத்துகிறது.
கடுகு எண்ணெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்தால், நம் உதட்டில் ஏற்படும் வெடிப்புகள் வராமல் தடுத்து, உதட்டின் அழகை அதிகரிக்கச் செய்கிறது.
பாதாம் ஆயில் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்து வந்தால், முகம் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து, முகம் எப்போதும் வசீகரமாக இருக்கும்.
தொப்புள் பகுதியில் எலுமிச்சை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், நமது முகம் கருமை அடைவதை தடுப்பதோடு, நமது சருமத்தின் நிறத்தில் அதிக பொலிவு கிடைக்கும்.
வேப்ப எண்ணெயை கொண்டு தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வதனால், நமது முகம் மற்றும் சருமத்தில் தோன்றும் வெண்புள்ளிகளை வராமல் தடுக்கிறது.
சுத்தமான பசுவின் நெய் கொண்டு தொப்புள் பகுதியை மசாஜ் செய்து வந்தால், நமது முகம் மிருதுவாகி, மாசுக்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக நம் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை குறைக்கிறது
எத்தில் ஆல்கஹால் (Ethyl Alcohol) தேய்த்த பஞ்சை தொப்புள் பகுதியில் வைத்து, சிறிது நேரம் கழித்து ஓய்வு எடுத்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள், காய்ச்சல், சளிகள் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணி கிடைக்கும்.
Average Rating