கடுப்பான காவ்யா மாதவன் போலீசில் புகார்..!!
Read Time:1 Minute, 5 Second
காவ்யா மாதவன் பற்றி முன்பு வித விதமான விமர்சனங்கள் வந்தன. திலீப்பை காவ்யா மாதவன் திருமணம் செய்து கொண்டார். இனி அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தார்.
சினிமாவில் இருந்தும் ஒதுங்கி விட்டார். என்றாலும், இணைய தளங்களில் காவ்யா மாதவன் பற்றி மோசமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் ஆவேசமான அவர் எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.யை சந்தித்து தன்னை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் காவ்யா மாதவன் உறுதியாக இருக்கிறார்.
Average Rating