யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம், பெற்றோல் குண்டு தாக்குதல்.!! (வீடியோ)
அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் புகுந்த மர்ம நபர்களின் வாள்வெட்டில் இருவர் படுகாயம்.
யாழ்ப்பாணம் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் நேற்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த பத்து மர்மநபர்கள் கடையில் வேலை செய்யும் இரு நபர்களை வாளால் தாக்கியுள்ளனர். பின்னர் கடையையும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர்.
இச் சம்பத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே தாக்குதலுக்கு ஆளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் மாநகர தீயணைப்பு படை ஆகியன விரைந்தனர்.
தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடையினுள் உள்ள சீ.சி.ரி கமெராவில் அணைத்தும் பதிவாகியுள்ள போதும் அவ் மர்ம நபர்கள் முகத்தினை மறைத்த நிலையில் வந்துள்ளனர். எனினும் அவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் சீ.சி.ரி கமெராவில் பதிவாகியுள்ளது.
Average Rating