திருச்சியில் எலிக்கறியை வாயில் கவ்வியவாறு விவசாயிகள் அரைநிர்வாண ஊர்வலம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 53 Second

201701311547220464_Trichy-farmers-nude-struggle_SECVPFதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்.

வங்கிகள் ஜப்தி நடவடிக் கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலைய சந்திப்பில் இருந்து எலிக்கறி சாப்பிட்ட படியும், வாயில் கவ்வியவாறும் திருச்சி தலைமை தபால் நிலையம் வரை விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அவர்கள் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

எலிக்கறியை வாயில் கவ்வியவாறு விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணிகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்..!!
Next post கருத்தடைக்கு இனி ஆணுறை தேவையில்லை: ஒரே ஒரு ஊசி போதும்..!!