ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!!

Read Time:1 Minute, 51 Second

00 (2) (2)மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி பாடசாலையொன்றில் சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டதில் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரபல பாடசாலையைச் சேர்ந்த சப்ரி அஹமட் எனும் மூன்றாம் தரத்தில் கல்விகற்கும் இந்தச் சிறுவன் நேற்று (புதன்கிழமை) குறித்த பாடசாலையில் வைத்து அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் தாக்கப்பட்டுள்ளாதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் உடலெங்கும் சுமார் 25 இற்கு மேற்பட்ட அடிகாயத் தழும்புகள் உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தான் சிறுநீர் கழிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்து மீண்டும் வகுப்புக்குச் சென்றபோதே தன்மீது ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதாக சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இச்சம்பவம்பற்றி பெற்றோர் காத்தான்குடி சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கு முறையிட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த சோதனை..!!
Next post பாலூட்டும் தாய்மார்கள் இதெல்லாம் அதிகமா சாப்பிடுங்க..!!