காதல் டார்ச்சர்: தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி..!!
Read Time:1 Minute, 17 Second
காதல் தொல்லையால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த கீர்த்தனாஎன்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்துவந்துள்ளார்.
இவரை முகமது தாகீர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், கீர்த்தனாவின் கைப்பேசி எண்ணை தெரிந்துகொண்ட இவர், அவரை தொடர்பு கொண்டு தன்னைகாதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
மேலும், பேஸ்புக்கில் உனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவிடுவேன் எனமிரட்டியுள்ளார்.
இதனால், மனமுடைந்த கீர்த்தனா தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கழிப்பறையில் கிடைத்த கீர்த்தனாவின் கடிதம் மற்றும் அவரது டைரி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating