பப்பாளி பழத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா?..!!
ஒவ்வொரு வகையான பழத்திலும் பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயமாகும்.
அப்படி இருக்கும் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அந்த வகையில், நாம் தினமும் அளவுக்கு அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், பல்வேறு பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும்.
பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
பப்பாளிப் பழத்தில் கரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பிரச்சனையான Carotenemia-வை ஏற்படுத்துகிறது.
பப்பாளியில் Papain என்ற என்சைம் காணப்படுகிறது, இந்தியாவின் Purdue University நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு Papain என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்துள்ளது, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடன்டாக விட்டமின் சி திகழ்கிறது, எனினும் விட்டமின் சி-யை குழந்தைகள் ஒருநாளைக்கு 1200 மில்லிகிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்கள் 2000 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் உருவாக்கத்தை தூண்டுகிறது.
அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
Average Rating