புதிய படத்தில் சிரஞ்சீவி ஜோடி அனுஷ்கா..!!
அரசியலுக்கு சென்று மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சிரஞ்சீவி 10 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த ‘கைதி நம்பர் 150’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் முதலில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் ‘பாகுபலி 2’ படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியவில்லை.
பின்னர் நயன்தாராவிடம் பேசினார்கள். அவரும் நடிக்காததால் காஜால் அகர்வால் நடித்தார். இந்த படத்தின் வெற்றியால் உற்சாகம் அடைந்த சிரஞ்சீவி அவருடைய அடுத்த 151-வது படத்துக்கு தயாராகிவிட்டார்.
இதற்கு ஒரு நல்ல கதையை தயார் செய்யும் படி தெலுங்கு டைரக்டர் சூரியிடம் சிரஞ்சீவி கூறி இருக்கிறார். இதில் அவருடைய ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ‘கைதி எண் 150’ ஐ தயாரித்த சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.
‘பாகுபலி-2’ படத்தில் நடித்து முடித்த பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடி போட தயாராகி வருகிறார்.
Average Rating