உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..!!

Read Time:1 Minute, 25 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் இன்று (07) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும், அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்..!!
Next post தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா?..!! (கட்டுரை)