ஓபிஎஸ் கூறியது உண்மையா? அதிரடி பதில் அளித்த சசிகலா: என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)
தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.
பன்னீர் செல்வத்திற்கு பின்னால் திமுக உள்ளதாக குற்றம் சாட்டிய சசிகலா, நான்கு நாட்கள் நடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் ஸ்டாலினும், பன்னீரும் சிரித்து பேசியதே அதற்கு ஆதாராம் என்று கூறியுள்ளார்.
மேலும் தாங்கள் ஒன்றும் அவரை நிர்பந்தம் செய்யவில்லை என்றும் இது ஒரு சதி எனவும் சசிகலா கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் உறுப்பினர் பதவியில் இருந்து நிச்சயம் நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஓபிஎஸ் கூறுகையில், தனக்கு அதிமுக பொருளாளர் பதவி கொடுத்ததே ஜெயலலிதா தான், அதனால் தன்னை யாரும் எதில் இருந்தும் நீக்க முடியாது என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Average Rating