ஜெயாவின் மரணம் இயற்கையானதல்ல – சசிகலாவை விசாரிக்க வேண்டும்..!!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் இயற்கையானது இல்லை என்று தமிழக சட்ட சபையின் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பலவந்தமாக தள்ளிவிடப்பட்டதாக தாம் கேள்வியுற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே அவருடன் கூடவே இருந்த சசிகலாவின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக சசிகலா நடராஜன் பதவி ஏற்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் தமிழக ஆளுனர் வித்தியாசாகர் ராவோ, சட்டத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
சசிகலா முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சத்தியப்பிரமாணம் செய்து வைக்க வேண்டிய மாநில ஆளுனர் வித்தியாசாகர் ராவோ, மும்பை மற்றும் டெல்லிக்கான பயணத்தை மேற்கொண்டு இன்னும் சென்னை திரும்பவில்லை.
அவர் எதிர்வரும் புதன்கிழமை வரையில் சென்னைக்கு திரும்பமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அவர் சசிகலா முதலமைச்சராக முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் சட்ட வல்லுனர்களுடன்;ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating