சித்தூர் அருகே பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை..!!

Read Time:1 Minute, 54 Second

abuse (33)சித்தூர் மாவட்டம், தவனம் பல்லிமண்டலம், எம்.பி டி.ஓ. அலுவலகம் அடுத்த சின்னம்மசெருவு அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தவனம்பல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிநாராயணா, சப்இன்ஸ்பெக்டர் பரணிதரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மோப்பநாய் கீழ்புதூர் சாலையில் உள்ள சந்தை அருகே ஓடிச்சென்று நின்றுவிட்டது.

இது குறித்து, இன்ஸ்பெக்டர் ஆதிநாராயணா கூறுகையில்:- இறந்த பெண்ணுக்கு 35 வயது இருக்கலாம். இந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. கழுத்தில் காயம் உள்ளதால் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம், அல்லது வேறு யாராவது பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம்.

பிணத்தின் அருகே இருந்து எடுத்த நூறு ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. எனவே, கொலை செய்யப்பட்ட பெண் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

தொடர்ந்து, பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னைக்கு தாயுடன் வந்து கதை கேட்கும் ரித்திகாசிங்..!!
Next post வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான சில ஆயுர்வேத தீர்வுகள்..!!