ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக மாற்றப்படும்: பன்னீர்செல்வம்..!!

Read Time:1 Minute, 26 Second

201702082010047973_Jayalalithaa-s-Poes-Garden-will-be-converted-into-a-memorial_SECVPFபதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை மீது நேற்று இரவு கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் கட்சியின் பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனிடையே, பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கும், பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தனது பேட்டி ஒன்றின் போது முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

உடல்நிலைக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.

ஜெயலலிதா உயிரிழந்தது முதல் அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்..!! (கட்டுரை)
Next post பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கும் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!