இலங்கையிலுள்ள கிராமம் ஒன்றுக்கு ஏற்பட்ட நிலை! மக்களுக்கு ஏற்பட்ட அவலம்..!!
பதுளை ஹல்துமுல்ல, பதுளுதென என்ற பின்தங்கிய கிராமத்தில் வாழும் மக்களின் பெரும்பாலானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலியால் இங்குள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயணம் செய்வதில் உள்ள தூரம் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில், ஹல்துமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மருத்துவர் உபாலி வீரரத்ன உள்ளிட்ட குழுவினர் குறித்த கிராமத்திற்கு சென்று நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கி அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹல்துமுல்ல பிரதான வீதியில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பதுளுதென்ன கிராமம் அமைந்துள்ளது. பொலிஸார் தலையிட்டு நோயாளிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.
நோயாளிகள் பலங்கொடை மற்றும் ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Average Rating