யோகா பயிற்சி மூலம் உயிர் தப்பிய விவசாயி..!!
Read Time:1 Minute, 19 Second
ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியை சேர்ந்தவர் டேனியல் மில்லர் (45) விவசாயி. இவர் 3 டன் எடையுள்ள குழி தோண்டும் எந்திரத்தை ஒட்டிக்கொண்டு தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அணையின் கரையில் வந்த போது நிலை தடுமாறி எந்திரம் அணைக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் அவரும் நீரில் மூழ்கினார்.
இருந்தாலும் ‘யோகா’ பயிற்சி மூலம் மூச்சை அடக்கி கையை அடித்துக் கொண்டு தண்ணீரில் மிதந்தார். தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மீட்பு குழுவினர் மூக்கு அளவு தண்ணீரில் கஷ்டப்பட்டு மிதந்து கொண்டிருந்த டேனியல் மில்லரை காப்பாற்றினர்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “நான் யோகா ஞானி அல்ல. இருந்தாலும் ‘யோகா’ தான் உன் உயிரை காப்பாற்றியது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Average Rating