பெரியகுளத்தில் உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்ற சிறுவன்..!!

Read Time:2 Minute, 4 Second

201702101751493377_boy-who-refused-to-pleasure-woman-killed-periyakulam_SECVPFதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பண்ணப்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ். அவரது மனைவி கன்னீஸ்வரி (வயது 45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்- மனைவி 2 பேரும் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை பகுதியில் மாந்தோப்பில் தங்கி கூலிவேலை பார்த்து வந்தனர்.

நேற்று கன்னீஸ்வரி மாந்தோப்பில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக அவரது கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் தோப்புக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார்-யார்? என்று விசாரித்தனர். அப்போது ஏ. வாடிப்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் அடிக்கடி கன்னீஸ்வரிடம் பேசி வந்து உள்ளார். சில சமயங்களில் தவறாக நடக்க முயற்சித்து உள்ளார். அதேபோல் சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த கன்னீஸ்வரியை ஜெயப்பிரகாஷ் உல்லாசத்துக்கு அழைத்தார்.

ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் அரிவாளால் கன்னீஸ்வரியை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவர் பிணமானார். இதனை பார்த்ததும் ஜெயப்பிரகாஷ் தப்பி சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஜெயப்பிரகாசை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்..!! (கட்டுரை)
Next post தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை: ராதிகா ஆப்தே புகார்..!!