சுவிஸில் பயங்கரம்: காருடன் எரிந்த நிலையில் கிடந்த கருகிய உடல்..!!
சுவிட்சர்லாந்தில் எரிந்த காரில் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Brittnau பகுதிக்கு அருகிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் எரிந்த நிலையில் கிடந்ததை கண்ட வழிபோக்கர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நடத்திய சோதனையில், காரிலிருந்து உடல் கருகிய சடலம் ஒன்றை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் Wikon பகுதியை சேர்ந்த 55 வயதான ஆல்பிரட் டேன்னர் என்ற நபருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது, இறந்தது ஆல்பிரட் டேன்னர் என்பதும் தெளிவாக இல்லை.
எனினும், டேன்னர் இன்னும் அகப்படவில்லை என்பதால், அவர் காருடன் எரிந்திருப்பார் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்காத நிலையில், பொலிசார் இது தற்கொலையா? விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவத்தில் நேரில் பார்த்த சாட்சிகளையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating