வீதியினை கடக்கும் போது தாய்க்கும், மகனுக்கும் நேர்ந்தகொடூர சம்பவம்..!! (அதிர்ச்சி வீடியோ)
Read Time:1 Minute, 20 Second
தாய் தள்ளுவண்டியில் மகனை வைத்து கொண்டு பாதசாரிகள் கடக்கும் கடவையின் ஊடாக கடக்கும் போது கடவையின் முடிவில் காருடன் மோதுண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அர்ஜென்டீனா புஏனோஸ் ஐரிஸின் அயல் நகரமான கபள்ளிட்டோவில் இடம்பெற்றுள்ளது.
தாய் தொலைபேசில் உரையாடியவாறு பாதசாரிகள் கடக்கும் கடவையில் பாதையினை கடந்து மறுமுனையினை அடையும் போது ஒரு காருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகும் காட்சி அருகிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தில் தாயின் இடது கால் காயமடைந்துள்ள அதேவேளை குழந்தைக்கு எவ்வித காயமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், அதிஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பியது இறைவனின் கருணையே என தெரிவித்துள்ளார்.
Average Rating