நிருபர்களுக்கு சசிகலா நக்கல் பதில்.. நீங்கள் புத்திசாலிகள் தானே என கிண்டல் வேறு..!!

Read Time:2 Minute, 55 Second

13-1486968566-sasikala9கூவத்தூரில் பெரும் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அவர்களின் கேள்விகளுக்கு மிக நக்கலாக பதிலளித்தார். எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாத அவர் செய்தியாளர்களையே திருப்பி கேள்வியாக கேட்டு வெறுப்பேத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் அவர்களை மன்னார்குடி கும்பல் சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.

அவர்களை செய்தியாளர்கள் சந்திக்க தடைவிதிக்கப்பட்டது. நேற்று எம்எல்ஏக்களை சந்திக்க சென்ற சசிகலாவை பின்தொடர்ந்து செல்ல முயன்ற செய்தியாளர்களை மன்னார்குடி கும்பலால் குவிக்கப்பட்டுள்ள குண்டர்கள் தாக்கினர். அவர்களின் கேமரா உள்ளிட்ட கருவிகளையும் பிடுங்கிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சசிகலாவின் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நக்கலாகவே பதிலளித்தார்.

எந்த பத்திரிக்கை என மிரட்டல் நீங்கள் எந்த பத்திரிக்கை என மிரட்டிய அவர் நீங்கள் எல்லாம் புத்திசாலிகள் தானே என கிண்டலடித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் செய்தியாளர்களை திருப்பி கேட்டு வெறுப்பேத்தினார்.

உற்சாகப்படுத்திய ஆதரவாளர்கள் அவ்வப்போது தன்னை சுற்றி நின்றிருந்த தனது ஆதரவாளர்களை பார்த்தும் அவர் சிரித்துக்கொண்டார். சசிகலாவின் இந்த செய்கையை அவரை சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். திரும்பி பார்க்கக் கூடாது சசிகலாவின் இந்த நடவடிக்கை செய்தியாளர்கள் இனி தன்பக்கம் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது என்பது போல் இருந்தது. அதேநேரத்தில் சசிகலாவின் பேச்சால் செய்தியாளர்களும் கொந்தளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?..!!
Next post நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை..!!