விமான நிலையத்தில்…விமான ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கிய பயணிகள்..!! (வீடியோ)
சீனாவில் விமான நிலையம் ஒன்றில் விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஆகும் என்று கூறியதால் பயணிகள் இருவர் அங்கிருந்த விமான ஊழியர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் Kunming பகுதியில் Changshui என்ற சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு தயராக இருந்துள்ளது.
இதனால் அவ்விமானத்தில் செல்பவர்கள் அனைவரும் அங்குள்ள சோதனை மையத்தில் சோதனை செய்வதற்காக வரிசையில் நின்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்.
திடீரென்று வரிசையில் நின்று கொண்டிருந்த சக பயணிகள் இருவர் அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக வந்து அவர்களைத் தடுத்துள்ளனர்.
இருப்பினும் விமான ஊழியருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, இரத்தம் வந்ததாகவும், சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் மது குடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனால் செய்வதறியாமல் இது போன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Average Rating