விடுதலைப்புலிகளுக்காக நீர்மூழ்கி கப்பல் வாங்கமுயன்றவர் கைது
Read Time:1 Minute, 5 Second
விடுதலைப்புலிகளுக்காக, இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றையும், போர்க்கப்பல் வடிவமைப்புக்கான மென்பொருளையும் வாங்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடைய பெயர், ரோட்டர்லூ சுரேஷ் என்கிற சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராசா. கனடாவில் வசித்துவந்த அவரை அமெரிக்கா புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
விடுதலைப்புலிகளுக்காக நிதி திரட்டியதாக ஏற்கனவே 5 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அவர்களில் ரோட்டர்லூ சுரேசும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னி பகுதியில் ஆயுத பயிற்சி பெற்றதற்கான ஆதாரங்களையும் போலீசார் அவரிடம் இருந்து கைப்பற்றி உள்ளனர்.