காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!
இந்தியா அதிக அளவில் பாதுகாப்பு சாதனங்களை இறக்குமதி செய்யும் நாடாக திகழ்ந்து வருகிறது. தனது நட்பு நாடானா ரஷ்யாவிடம் இருந்து பல்வேறு சாதனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் உள்நாட்டிலேய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மேக் இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வருகிறார்.
அதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை கோரி வருகிறார். இதில், இந்தியாவில் ஹெலிக்காப்டர்களை தயாரிக்க ரஷ்யா நீண்ட காலமாக முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோ சென்றிருந்தார். அப்போது இந்தியா ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே காமோவ் -226டி ஹெலிகாப்டரை இரண்டு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்ய இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்திய-ரஷ்ய நாடுகளுக்கிடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா அதிகாரிகளுடன் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஹெலிகாப்டர் தயாரிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், இரண்டு மாதங்களில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த சில வருடங்களாக தனது நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவை விடுத்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating