படம் எடுக்க வட்டிக்கு வாங்கிய நடிகை : படம் தோல்வி, 3 நாள் நிர்வாணமாக்கி… திவாகரன்??..!!

Read Time:4 Minute, 27 Second

Gp9DIoQGdhivakaran_Liveday-450x254தமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்:

குறிப்பாக நினைத்த ஹீரோயின் நினைத்த இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள்.

ஒரு புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதற வைப்பவை.

படம் எடுக்க பினாமிகள் மூலம் பணம் கொடுப்பதும் பணம் கொடுக்க தாமதமானால் அந்த குடும்பத்துப் பெண்களைப் படுத்தும் பாடும் பகீர் ரகம்.

தமிழ் சினிமாத்துறையினர் சசிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் பட்டக்கஷ்டங்களை மனம்குமுறி இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர்.

திருமண மிரட்டல், சொத்துக்காக மிரட்டல் என்பதையும் தாண்டி, சசியின் குடும்பத்தின் ஆண் பொறுக்கிகள் பெண்கள் விஷயத்தில் செய்த பொறுக்கித்தனம் ஏராளம்.

தினகரன், வெங்கடேஷ், திவாகரன் தொடங்கி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரை நடிகைகளுக்கும், இளம் பெண்களுக்கும் கொடுத்த டார்ச்சர் ஏராளம்.

‘கில்லி’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜை போல, ஒரு பெண்ணை (நடிகையை) தனக்கு பிடித்து விட்டால் அவரை ஒரு முறையாவது அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவர் இளவரசியின் மகன் விவேக்.

பல முன்னணி நடிகைகளே இந்த பொறுக்கிகளால் பாதிக்கப்பட்டனர் என்றால் மற்ற சாமானிய பெண்களின் பட்டியலை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு தொடைஅழகி சொந்தப் படம் எடுத்தார். படம் எடுக்க அந்த மதுரை பினாமி மூலம் பல லட்சங்கள் கடன் வாங்கினாராம்.

படம் முடிய கொஞ்சம் காலதாமதம். அதற்குள் வட்டி எகிறியது. படம் வெளியாகி படு தோல்வி. நடிகை கலங்கிப் போனார். பினாமியிடம் இருந்து அழைப்பு.

பயந்து நடுங்கியபடி போனார் நடிகை. இழுத்து ஒரு அறையில் தள்ளி உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி உட்காரவைத்து விட்டது அடியாள் கும்பல்.

அவரது வீட்டிற்கு தகவலும் போனது. பணம் பைசல் பண்ணிட்டு கூட்டிப் போங்க என்று.

தாய்க்குலம் அலறியபடி எங்கெங்கோ கையேந்தி பிச்சை எடுத்து பணம் புரட்டி கொண்டுபோய் கொடுத்து மகளுக்கு ஆடை கட்டிக் கூட்டிக்கொண்டு போனார்.

அத்தோடு அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டு ஓடியே போனார்.

இன்னொரு குடும்பப் பாங்கான ஹீரோயினும் தனது காதல் கணவர் சொந்தபடம் எடுப்பதற்கு மன்னார் அன்ட் கம்பெனியில் வட்டிக்கு வாங்கி படம் படுத்துக் கொள்ள, அதே நிர்வாணக் கோலம்.

கணவர் கதறி அழுதும் பயனில்லை. அதன் பின் புலன்களை விற்று பணம் புரட்டிக் கொண்டு போய் கொடுத்து ஆடை உடுத்தச் சொல்லி மனைவியை கூட்டி போனார்.

அந்த நடிகையும் இப்போது சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு ஓடிப் போனார். இப்படி நிறைய சொல்கிறார்கள்.

இத்தனை நாட்களும் வெளிய சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது திரு.ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான சசி எதிர்ப்பு செயல்களால் நேரிடையாகவும், வெளிப்படையாகவும் தங்களது பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கு நடக்கும் கொடுமைகளைக் கொஞ்சம் பாருங்களேன்..!! (அதிர்ச்சி வீடியோ)
Next post 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்த பிஎஸ்எல்வி சி-37: இஸ்ரோ சாதனை..!!