மாமியார், மாமனாருடன் சண்டை ஆத்திரத்தில் தனது 2 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..!! சிசிடிவி காணொளி

Read Time:3 Minute, 10 Second

hqdefaultமாமியார், மாமனாருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, ஆத்திரத்தில் தனது இரண்டு வயது ஆண் மகனை இரண்டாவது மாடியில்; இருந்து பெண் ஒருவர் தூக்கி எறிந்துள்ளார்.நெஞ்சை உருக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளன.

மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.தென் கிழக்கு டெல்லியைச் சேர்ந்த நிதின் குப்தா அழகுசாதனப் பொருட்களை கடை வைத்துள்ளார். இவருக்கும் சோனு குப்தா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 2 வயதில் அனுஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. சோனு அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர் என்றும் ஆத்திரத்தில் எதை செய்கிறோம் என்பதை அறியாமல் செயல்படக் கூடியவர் என்றும் நிதின் மற்றும் அவரது பெற்றோர் கூறினர்.

இந்நிலையில்கடந்த சனிக்கிழமை சோனுவுக்கும், நிதினின் தாயாருக்கும் ( மாமியார்) இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் அவரிடம் பேசி கொண்டிருந்தோம். அவர் சொத்து குறித்து தகராறு செய்து கொண்டிருந்தார்.

கத்தி கொண்ேட, படுக்கையில் தூங்கி கொண்டிருந்த எனது பேரனை, (தனது மகனை) சோனு இரண்டாவது மாடியில் இருந்து தூக்கியெறிந்தார். இந்த கொலைப் பழி உங்கள் மீது விழும் என கத்தினார். எனது மருமகள் என்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவார். இது போன்ற நிகழ்வுகளுக்கு சாட்சியமாக, சிசிடிவி கெமராக்களை பொருத்தினோம் என்றார்.

இந்த காட்சிகள் வீட்டில் இரு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக நிதின் பொலிசாரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.சோனு வீசியெறிந்ததில் குழந்தை அனுஷின் தலை, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் அவன் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போதும், சோனுவின் புகுந்த வீட்டினர் செவ்வாய்க் கிழமைதான் புகார் அளித்துள்ளனர். இதுவரை சோனு கைது செய்யப்படவில்லை. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் உண்டாகும் உச்சம் இரவு முழுக்க தொடரணுமா? இதோ வழி..!!
Next post ஒற்றைக்கண்ணுடன் பிறந்த உயிரினம்: கேகாலையில் அதிசயம்..!