மொடல் அழகி செய்த காரியத்தால் கடும் சர்ச்சை..!! பதறவைக்கும் காணொளி

Read Time:1 Minute, 58 Second

hqdefaultரஷியாவின் பிரபல மாடல் அழகி ஏஞ்சலினா நிக்கோலு. 23 வயதான இவர் ரஷியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு விளம்பர மாடல் அழகியாக உள்ளார். துபாய் வந்த அவர் இங்குள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றான கயான் கட்டிடத்தின் உச்சிக்கு தன் ஆண் நண்பருடன் சென்றார்.

1,004 அடி உயர அந்த கட்டிடத்தின் உச்சியின் விளிம்பில் உயிரை பணயம் வைத்து ஆண் நண்பரின் கையை பிடித்துக்கொண்டு கீழே தொங்கியபடி படம் எடுத்துக்கொண்டார். அப்போது, பாதுகாப்புக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளோ அல்லது இந்த படங்களை எடுத்துக்கொள்ள அனுமதியோ பெறவில்லை. தனது துணிச்சலை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடல் அழகியின் அபாய துணிச்சல் காட்சியை பார்த்து பலர் வியந்து பாராட்டும் நேரத்தில் கடும் கண்டனங்களும் வெளியாகி உள்ளன. ரஷிய மாடல் அழகியின் இந்த ஆபத்தான புகைப்பட காட்சியை பார்த்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த காட்சியை பார்த்த பலர், சமூக வலைத்தளங்களில் “இவர் இளைஞர்களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக உள்ளார். கடவுள் உங்களுக்கு அழகை கொடுத்த அளவுக்கு அறிவை கொடுக்கவில்லை” என கடுமையாக சாடியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்ற விஜய்..!!
Next post ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்..!!