`2.0′ படப்பிடிப்பில் அக்ஷய்குமார்-ஏமி ஜாக்சன் இடையே கடும்சண்டை..!!
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து `2.0′ படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக `2.0′ படம் தயாராகி வருகிறது.
இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
450 கோடி பட்ஜெட்டில் லைகா புரெடெக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே கடுமையான சண்டைக்காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 தீபாவளி ரிலீசாக `2.0′ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating