சிலிண்டர் வெடித்து கணவன்- மனைவி பலி: தீயில் கருகிய 2 மகன்களும் உயிருக்கு போராட்டம்..!!
Read Time:1 Minute, 6 Second
சென்னை புதுப்பேட்டை வீரபுத்திரன்சாமி தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). இவரது மனைவி பாத்திமா (38). இவர்களது மகன்கள் ரியாஸ்வான் (17), ரியாஸ் (14).
கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த 4 பேரும் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாத்திமா, காஜாமைதீன் இருவரும் இறந்தனர். மகன்கள் ரியாஸ்வான், நியாஸ் ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating