புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!

Read Time:5 Minute, 14 Second

புண்களை-ஆற்றும்-வள்ளிக்கிழங்குநமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணத்தை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். இதில், வைட்டமின் சி, மாவுச்சத்து உள்ளது. வேகவைத்த வள்ளிக்கிழங்கு இனிப்பு சுவையை தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. மூட்டுவலியை போக்கும் தன்மை கொண்டது.

வள்ளிக்கிழங்கு இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். வள்ளிக்கிழங்கு இலைகளை நீர்விட்டு அலசி எடுக்கவும். இதை பூச்சிக்கடி, வண்டுக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டிவைத்தால் வலி குணமாகும். புண்களை ஆற்றும் மருந்தாக வள்ளிக்கிழங்கு விளங்குகிறது. வள்ளிக்கிழங்கின் இலைகளை நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி இளஞ்சூட்டுடன் பருகுவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும்.

வள்ளிக்கிழங்கு இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது.
வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வள்ளிக்கிழங்கு, உப்பு, சீரகப்பொடி, தயிர். செய்முறை: வேகவைத்த வள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மசித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சிறிது சீரகப்பொடி, தயிர் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டுவர குடலில் ஏற்பட்ட புண் ஆறும். ரத்த கசிவு நிற்கும்.

வள்ளிக்கிழங்கு அற்புதமான உணவாக விளங்குகிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளித்தள்ள கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது. வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வள்ளிக்கிழங்கு, நெய், தேங்காய் துருவல், சுக்குப்பொடி, வெல்லம்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றவும். இதனுடன் வேகவைத்த மசித்த வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும். வள்ளிக்கிழங்கில் உள்ள புரதம், மாவு, இனிப்பு சத்து ஆகியவை குளிர்ச்சி தந்து உடலுக்கு பலம் தரக்கூடியதாக விளங்குகிறது. வள்ளிக்கிழங்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய கூடியதாகிறது. சிறுநீரை சீராக வெளித்தள்ளும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுக்களை விலக்கும்.

குடலின் அடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வள்ளிக்கிழங்கை குழந்தைகளுக்கு தின்பண்டம் போன்று செய்து கொடுப்பது நல்லது. பாதுகாப்பான வள்ளிக்கிழங்கை அடிக்கடி பயன்படுத்தினால் உடல் நலம் பெறும்.ஈறுகள் வீக்கத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: புங்கன்மர பட்டை, கடுக்காய் தோல் சூரணம். நிழலுக்காக வளர்க்கப்படும் புங்க மரத்தின் பட்டையை தூளாக்கி எடுக்கவும். இதனுடன் கடுக்காய் தோல் சூரணம் சம அளவு சேர்த்து நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால், ஈறுகள் வீக்கம், பற்களில் ரத்த கசிவு சரியாகும். பற்கள் பலப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்! சந்தேக நபருக்கு பொலிஸ் வலை..!!
Next post படுக்கையறையில் ஆணும் பெண்ணும் கூச்சப்படாமல் செய்யும் செயல்கள்..!!