சமூகவலைதளத்தின் ஹீரோவான நாய்: ஒரு சல்யூட் அடியுங்கள்..!! (வீடியோ)
வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய், மனிதர்களின் பாதுகாப்புக்கும் உதவுகிறது.
நாய்க்கு நன்றி உணர்வு உள்ள காரணத்தினாலேயே அனைவருக்கும் பிடித்த பிராணிகளின் வரிசையில் எப்போதும் நாய் முதல் இடத்தில் உள்ளது.
ஆனால், என்னை போன்ற இனத்திற்கு நன்றி உணர்வு மட்டுமல்ல மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஆறாவது அறிவான பகுத்தறிவும் இருக்கிறது என்று நிரூபித்துள்ளது இந்த நாய்.
புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை சந்திப்பு மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடமாகும்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையின் வழியாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சிக்னல் போடப்பட்டது, ஆனால் அந்த சிக்னலை பொருட்படுத்தாது போக்குவரத்து விதிகளை மீறி மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த நாய் பொறுமையாக காத்திருந்து சிக்னல் கிளியர் ஆனதும் சாலையினை கடந்து சென்றது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல், இந்த நாய்க்கு சல்யூட் அடித்துள்ளனர்.
Average Rating