பிச்சை போட மறுத்தவரை சரமாரியாக குத்திய பிச்சைக்காரர்கள்: பிரித்தானியாவில் பயங்கரம்..!!

Read Time:2 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் பிச்சை போட மறுத்தவரை கத்தியால் சரமாரியாக குத்திய இரண்டு பிச்சைக்காரர்களுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் Newcastle பகுதியிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட Keith Newbold பல மாத தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது மீண்டுள்ளார்.

சம்பவத்தன்று Keith Newbold வாடகை கார் ஓட்டுநருக்கு பணம் கொடுக்க அருகில் உள்ள ஏடிஎம்க்கு சென்றுள்ளார். அப்போது, Dean Jones, Sean Kelly என்ற இரண்டு பிச்சைகாரர்கள் அவரிடம் பிச்சை கேட்டுள்ளனர்.

Keith Newbold பிச்சை போட மறுக்க Dean Jones கத்தியை எடுத்து சரமாரியாக ஆறு முறை குத்தியுள்ளார்.

பின்னர், Keith Newboldயின் உடமைகள் அனைத்தையும் Sean Kelly கொள்ளையடிக்க இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த Keith Newbold ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து Sean Kelly திருடி ஏடிஎம் கார்டை உணவகத்தில் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நீதிமன்றம் தற்போது தண்டனையை அறிவித்துள்ளது.

அதில் முக்கிய குற்றவாளி 26 வயதான Dean Jonesக்கு 12 வருடம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

Sean Kellyக்கு 14 மாத சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட Keith Newbold தற்போது தீவிர சிகிச்சையால் குணமடைந்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் இருந்த பெண்ணை ஒரே குடும்ப அகதிகள் கூட்டாக கற்பழித்த கொடூரம்..!!
Next post வாட்ஸ்அப்பில் ஆபாச படம்! அதிர்ச்சியில் உறைந்த பெண் அதிகாரிகள்! அவரா இப்படி ?..!!