தகாத உறவால் வந்த வினை; இளம் யுவதி சடலமாக மீட்பு..!!

Read Time:1 Minute, 42 Second

sdadfஹங்குராங்கெத , கலஹ – லெவலன்வத்தை பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலை செய்து புதைத்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் தகாத உறவு வைத்திருந்த நபரினால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று ஹங்குராங்கெத பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதுடைய குறித்த பெண் ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, தகாத தொடர்பு வைத்திருந்த நபருடன் வசித்து வந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபரின் மனைவி வௌிநாட்டில் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்ட யுவதியுடன் சுமார் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவராத்திரி தினத்தில் ரசிகர்களுக்கு விருந்தளித்த `பாகுபலி-2′ படக்குழு..!!
Next post பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்..!!