என்னுடன் விளையாடு’ பணியாளரின் காலைக் கட்டிக்கொண்டு கெஞ்சும் பாண்டா..!! வைரல் வீடியோ

Read Time:1 Minute, 31 Second

201702241405056278_Play-With-Me-cute-panda-video-goes-viral_SECVPFஆறறிவு படைத்த மனிதனைப் போல ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பாசமுண்டு என்பதை பல்வேறு நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு நிகழ்வு தற்போது இணைந்துள்ளது.

சீனாவின் செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் பணியாளர் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். அங்குள்ள பாண்டா கரடிக்குட்டி ஒன்று அவரை வேலை செய்ய விடாமல் என்னுடன் விளையாடு என அவரின் காலை கட்டிக்கொள்கிறது.

குழி தோண்டி மூங்கில்களை நட்டுக் கொண்டிருக்கும் பணியாளர் நேரமின்மையால், அந்தக் குட்டியை தூக்கி சற்று உயரத்தில் விட்டு தனது வேலையைத் தொடர்கிறார். ஆனால், மேலிருந்து கீழே இறங்கி வரும் கரடிக்குட்டி மீண்டும் அவரது காலை கட்டிக்கொள்கிறது.

இதுபோல மூன்று முறை உயரத்தில் விட்டும் கரடிக்குட்டி கீழிறங்கி வந்து அவரது காலை கட்டிக்கொள்கிறது. பார்ப்பவர்களின் மனதை உருகச்செய்யும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தகவல்..!!
Next post பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்..!!