தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்..!!

Read Time:2 Minute, 59 Second

201702241122446989_Samantha-urging-of-his-marriage-to-Soon_SECVPFதெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பேஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.

இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள்.

முதலில் அகில் திருமணத்தை நடத்துவது என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை ஐதராபாத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது அகில்-ஸ்ரேயா திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விருந்தினர்களிடம் போனில் தெரிவித்து இத்தாலி பயணத்துக்கு தயாராக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியவில்லை.

அகில்-ஸ்ரேயா பூபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே திருமணம் நின்றுபோனதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இது நடிகை சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது திருமணத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே நடத்தி விட அவர் அவசரம் காட்டுவதாகவும், இதுகுறித்து நாகார்ஜுன் மற்றும் நாகசைதன்யாவிடம் அவர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா விருப்பப்படியே முன்கூட்டி திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா கவலைய விடுங்க… வெங்காயம் போதும்..!!
Next post ரத்த, பித்த நோய்களை குணமாக்கும் நெல்லிக்காய்..!!